தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (16.07.2022) சனிக்கிழமை மாலை 4.00அளவில் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்)அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

33ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வாக கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்ததோடு, நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி, மலர் அஞ்சலி என்பன இடம்பெற்று தலைவர் சித்தார்த்தன் அவர்களின் உரையும் இடம்பெற்றது. வவுனியா நகரசபை உறுப்பினர் ஆசிரியர் காண்டீபன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

நிகழ்வில் கட்சியின் செயலாளர், குருபரன், பொருளாளர் பவன், உபதலைவர்கள் ராகவன், விசுபாரதி, கேசவன், நிர்வாகப் பொறுப்பாளர் பற்றிக், தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், மாவட்ட இணைப்பாளர்கள் மன்னார் – கொன்சால், கிளிநொச்சி – ராஜா, யாழ் – கஜதீபன், பிரதேசசபை தவிசாளர்கள் வவுனியா வெண்கலசெட்டிக்குளம் பிரதேச சபை – சிவம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை – யோகன், பிரதேச சபை உறுப்பினர்கள் குகன், செல்வம்,

மகாநாட்டு ஏற்பாட்டுக்குழு சார்பில் தயாபரன், தோழர் முத்தையா கண்ணன், முன்னாள் மத்தியகுழு உறுப்பினர்கள் ரவி, வசந்தராசா, ரவிந்திரன், சிரேஸ்ட உறுப்பினர்கள் – மாலா, சீதா, பிரேமா, சிவா, ஓசை, இளங்கோ, பிரேம் மற்றும் பார்த்தீபன், தவம், சங்கர், அன்டன், வாவா, ரஞ்சன், பாபு, ராவணன், சதீஸ், சுரேஸ், சந்திரன், ரூமி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், மறைந்த தோழர்களின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.