நாட்டில் இன்றையதினம் (20) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 664,572 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒற்றை இலக்கத்தில் காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 50க்கும் மேல் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.