Header image alt text

ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தனுஷ்க ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக சானக கருணாரத்னே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி, புதிய மக்கள் ஆணைக்கு செல்ல வழியமைக்க  வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி செயலகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது, வெள்ளிக்கிழமை (22) நள்ளிரவுக்குப் பின்னர், கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அம்பலப்படுத்துமாறும். அந்தத் தாக்குதல்க​ளை கண்டித்தும், இன்று (25)  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. Read more

ஜனாதிபதி செயலகம், அரச பணிகளுக்காக இன்று(25) மீள திறக்கப்பட்டுள்ளது. கோட்டா கோ கம எழுச்சிப் போராட்டம் காரணமாக, கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி செயலகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் வீடு செல்ல வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை என தெரிவித்த அவர், எனவே மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்றார். Read more

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையானது மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை இப்பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் ஹர்சன கெக்குணவல இந்த பயணத்தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். Read more