ஜனாதிபதி செயலகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது, வெள்ளிக்கிழமை (22) நள்ளிரவுக்குப் பின்னர், கண்மூடித்தனமாக தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அம்பலப்படுத்துமாறும். அந்தத் தாக்குதல்களை கண்டித்தும், இன்று (25) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.