Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 26 July 2022
Posted in செய்திகள் 

மல்லிகைத்தீவை பிறப்பிடமாகவும் தம்பிலுவிலை வாழ்விடமாகவும் கொண்ட திரு. வேலுக்குட்டி கணபதிப்பிள்ளை அவர்கள் இன்று (26.07.2022) காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

தமிழினப் படுகொலையினை நினைவுகூர்வோம்
==============================

1983 ம் ஆண்டு ஆடி மாதம் 25 மற்றும் 27ம் நாட்களில், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள், அரச படைகள் மற்றும் சிறை அதிகாரிகளின் அனுசரணையுடன், காடையர்களாலும் கைதிகளாலும், சிறைக்கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட, 53 ஈழப் புதல்வர்களினதும் 39 வது நினைவு நாளில் அவர்கள் அனைவரையும் நினைவிற்கொண்டு, அவர்களின் விடுதலைக் கனவுகளையும் இனப் பற்றுதலையும் போற்றிடுவோம், எம் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குவோம். Read more

26.07.2003இல் மரணித்த தோழர் டெய்லர் (சுப்ராயன் கந்தசாமி – வவுனியா) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் தங்கியிருந்த 4 பேரையும் ஜூலை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நான்கு பேரும் இன்று முற்பகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விமானம் ஊடாக டுபாய் நோக்கிப் பயணிக்க தயாராக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் சி.ஐ.டியினரால் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். Read more

கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்காக 04 ஆவது தடுப்பூசியையும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் என்பன இன்று (26.07.2022) கூடி பின்வரும் முடிவுகளை எட்டின. Read more

மூன்று ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் (அச்சு ஊடகம்) பியசேன திஸாநாயக்க மற்றும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் (மின்னணு ஊடகம்) ஷனுக்க கருணாரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

தற்போதைய கொவிட்-19 வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது கடுமையாக பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more