புதிய அரசாங்கத்தின் முதலாவது யோசனையாக பாராளுமன்றத்தில், இன்று (27) கொண்டுவரப்பட்ட அவசரக்காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதனடிப்படையில் 57 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.