திருகோணமலை மூதூரை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை) அவர்கள் நேற்று (09.08.2022) சுகயீனம் காரணமாக மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த துயருடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
10.08.2022.