பிரித்தானிய GSP பிளஸ் சலுகைக்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்படும் புதிய கட்டண நிவாரணத் திட்டத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதன் மூலம் இலங்கைக்கு பாரிய நன்மை ஏற்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் அனுமதிக்கும் என்று அவர் கருதுகிறார்.

2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையின் 80% க்கும் அதிகமான ஏற்றுமதி பொருட்கள் பிரித்தானிய சந்தையில் வரியின்றி பிரவேசிக்க முடியும்.

இது தவிர இத்திட்டத்தின் கீழ் மேலும் 156 ஏற்றுமதி பொருட்களுக்கான வரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை விசேடமாகும்.