Header image alt text

18.08.2001இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குட்டி (செம்பாப்போடி .மேகநாதன்- திமிலைதீவு) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

உலக சந்தையில் எரிபொருள் விலையைப் பார்க்கும்போது உள்நாட்டில் பெற்றோல் லீற்றரை 250 ரூபாய்க்கு வழங்க முடியும் என, பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  உலக சந்தையில் எரிபொருளின் விலை கடந்த காலங்களில் பாரியளவில் அதிகரித்திருந்தாலும், பெரல் ஒன்றின் விலை 120 டொலரில் இருந்து 90 டொலராக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கோட்டாகோகம செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டது. இதனையடுத்து, கொழும்பு, கொம்பனி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் உள்ள சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக தெரிவிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளன. Read more