வவுனியா, செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் இராசேந்திரன் கிருபன் (வயது 15) என்ற மாணவனை ஓகஸ்ட் 16 முதல் காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி  மாணவன் 16 திகதி அதிகாலை 1 மணியளவில் நித்திரையால் எழுந்து தண்ணீர் அருந்தியதாகவும் அதுவரை வீட்டில் இருந்ததை அவதானித்ததாகவும் 16 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது  மகன் காணாமல் போயுள்ளதாகவும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயார்    முறைப்பாடு செய்துள்ளார் என காணாமல் போன மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் வகுப்பிற்கு போகாததனால் அவரை தயார் 15ஆம் திகதி கண்டித்திருந்தார். அதனாலேயே குறித்த மாணவன் காணாமல் போயிருப்பார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. எனினும்

இவ்விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரை, யாராவது அடையாளம் கண்டால் 0766922218, 0779987491 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் மாணவனின் சகோதரர்   தெரிவித்துள்ளார்.