எதிர்வரும் காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படவுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்படும் என்றார்.