ஐக்கிய இராஜ்ஜியத்திலுள்ள கழகத் தோழர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தின் ‘குணா’ மகளிர் அமைப்புக்கும், புலிமிச்சைநாதகுளம் கிராமத்தின் ‘துர்க்கா’ மகளிர் அமைப்புக்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுழற்சி முறையிலான கடனடிப்படையில் தலா ரூபாய் 50,000 வழங்கப்பட்டுள்ளன.

நேற்று (05.09.2022) திங்கட்கிழமை நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் இரா.தயாபரன், இளைஞர் அணிப் பொறுப்பாளர் யூட்சன், மத்தியகுழு உறுப்பினரும் யாழ் மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபன், சமூக செயற்பாட்டாளர்கள் பிரியந்தன் மற்றும் உதயன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.