ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவை பொறுப்பேற்கவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் பொய்யானவை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற கலந்துரையாடல்கள் கூட நடைபெறவில்லை என கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.