சுவிஸ் சூரிச் அடிஸ்வில் முருகன் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்தவரும், சமய சமூக செயற்பாட்டாளருமான தோழர் ஜெகன் (ஜெகநாதன்):அவர்களின் சிரேஷ்ட புதல்வரான (ஜெகி) செல்வன் ஜெகீசன் ஜெகநாதன் அவர்கள் நேற்று சுகயீனம் காரணமாக மரணித்துள்ளார்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிமீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
13.09.2022