கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த தோழர் சோ (குணசிங்கம் சிறீஸ்கந்தராஜா – சிறீ) அவர்கள் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு இயற்கை எய்தினார். இவர் ஆரம்ப காலங்களில், கழகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்பு துறைகளின் முக்கியஸ்தராக பணியாற்றியவர்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பெருந்துயரினைப் பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
14.09.2022