முல்லை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான குருந்தூர் மலைப்பிரதேசத்தில், தமிழர்களின் பூர்வீகப் பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் நோக்கோடு தமிழ் மக்களின் காணிகளைப் பறிமுதல் செய்வதற்காக கொழும்பில் இருந்து நில அளவைப்பிரிவினர் வருகை தந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, அதைத் தடுக்கும் நோக்குடன் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் களத்திற்கு சென்றிருந்தனர்.

புளொட் அமைப்பின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் தோழர் தவராஜா, இளைஞர்பிரிவுப் பொறுப்பாளர் தோழர் யூட், மாவட்டப் பொருளாளர் தோழர் விக்கி, புதுக்குடியிருப்பு பிரதேச அமைப்பாளர் தோழர் றொபின்சன் ஆகியோரும் மற்றும் தமிழரசுக் கட்சி சார்பில் திரு.ரவிகரன் திரு. இளஞ்செழியன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் சென்றிருந்தனர்.

நில அளவையாளர்களின் செயற்பாடு குறித்து கட்சியின் தலைவர் திரு. த. சித்தார்த்தன் அவர்களுக்கு மாவட்ட அமைப்பாளரால் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் உடனடியாகவே சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இதுபற்றி முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.