மன்னார் அரிப்பு கிராமத்தைச் சேர்ந்தவரும் கழகத் தோழர் சோதி (அ.பெனடிற் குரூஸ்) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி அ.வெரோணிக்கா லெம்பேட் அவர்கள் நேற்று (08.10.2022) சனிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
09.10.2022.

குறிப்பு: அன்னையின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெறவுள்ளது.