Eco Tablet எனப்படும் எரிபொருளுடன் கலக்கப்படும் மாத்திரை தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அத்தகைய மாத்திரை (Eco Tablet) சந்தையில் இருப்பதாகவும், சிபெட்கோவின் எரிபொருளுடன் அதனை கலப்பதற்கு எந்த நிறுவனத்திற்கும் எந்த ஆலோசனையையும் அல்லது ஒப்புதலையும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத்திரையானது பெற்றோலின் ஒக்டேன் எண்ணை அதிகரித்து எரிபொருளில் உள்ள கந்தகத்தின் அளவைக் குறைப்பதுடன் எரிபொருளின் செயல்திறனை மேம்படுத்தும் என பல்வேறு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.