பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதிகளில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநாடு  செல்வதற்கு வரையறுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த தீர்மதானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவசர சிகிச்சை காரணமாகவோ அல்லது அரசாங்கத்தின் அவசர காரியங்கள் தவிர்த்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆளும் தரப்பினர் வௌிநாடுகளுக்கு செல்வது வரையறுக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான வேலைத்திட்டங்கள் பிரதமரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் இரண்டாம் வாசிப்பின் பின்னரான விவாதம் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 07ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பம் மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது.