சுவிட்சர்லாந்தின் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இந்த மாதம் முதல் இலங்கையில் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது. 2022 நவம்பர் 10 முதல் 2023 மே வரை வாரந்தோறும் விமான சேவைகளை சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரவிருக்கும் சுற்றுலா பருவ காலத்தில் அதிகளவான ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதன் மூலம் சுற்றுலா துறை வலுப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.