யாழ்ப்பாணம், மீசாலை கிழக்கைச் சேர்ந்த கட்சியின் செயற்பாட்டாளர் த.கதிர்காமநாதன் (காந்தன்) அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தின் மகளிர் அமைப்புக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுழற்சி முறையிலான கடன் திட்டத்திற்கு ரூபாய் 50,000 வழங்கப்பட்டுள்ளது.

01.11.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சிரேஷ்ட உபதலைவர் வே.நல்லநாதர்(ராகவன்), கட்சியின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் சம யோகானந்தராசா, மாவட்ட செயலாளர் அந்தோனி ஜேம்ஸ், மாவட்ட பொருளாளர் பா.மேரி லூட்ஸ்குருஸ் (மாலா), மன்னார் மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் வரோனிக்கா (ரமா) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.