ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு 0611.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00மணிக்கு மல்லாவி கோவில் பொது மண்டபத்தில் துணுக்காய் பிரதேச சபையின் துணைத் தவிசாளர் சிவகுமார்/குட்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தலைவரும் யாழ் மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டதுடன், யோகாம்பிகை சமேத யோகபுர நாதர் ஆலய குருக்கள் அதிவணக்கத்துக்குரிய ஞானப்பிரகாசம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கட்சியின் பொருளாளரும், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான க.சிவநேசன் (பவன்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன், கட்சியின் மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சரஸ்வதி, கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் துணுக்காய் பிரதேச இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

துனுக்காய் பிரதேச ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணி நிர்வாகத் தலைவராக யதுசனும், செயலாளராக திரிசயனும், பொருளாளராக கவிந்தனும் மேலும் உப தலைவர், செயலாளர் உட்பட 11பேர் கொண்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

இவ் நிகழ்வில் துணுக்காய் பிரதேச மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்களான தமிழ்நிலவன், லிந்துஜா, துஸ்யந்தினி ஆகியோர் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய சாதனையாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் மாலை அணிவித்து,பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஊக்குவிப்பு நிதியுதவியும் கட்சியின் நிர்வாகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து இளைஞர் அணி செயலாளரால் நன்றியுரையுடன் கட்சியின் பிரதேச இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு நிறைவுபெற்றது.