அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்கும் முன்பதாக மூன்று பிரதான விடயங்களை முன்னிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ் தேசியக் கட்சிகள் இன்றுமாலை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடாத்திய சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ சுமந்திரன், சி.சிறீதரன், கோ.கருணாகரம், வினோ நோகராதலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more