மட்டக்குளிய பகுதியில், நபரொருவர் இன்றுகாலை படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் காரொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த அந்த நபர், கொழும்பு ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார்.

மட்டக்குளிய சஃபியா ஒழுங்கையில் வசிக்கும் மொஹமட் பதூர்தீன் மொஹமட் ஹரிநாஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.