அடுத்த ஆண்டு முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை பதிவு அவசியமானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை பதிவு அவசியமில்லை என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அடுத்த வருடம் முதல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை பதிவு அவசியமானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.