29.11.1985 அன்று திருவையாறில் மரணித்த தோழர்கள் சின்ன நியாஸ் (நா.பாலசந்திரன் – வட்டகச்சி), ஐவன் (மகாலிங்கம் – கனகபுரம்) ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 29 November 2022
Posted in செய்திகள்
29.11.1985 அன்று திருவையாறில் மரணித்த தோழர்கள் சின்ன நியாஸ் (நா.பாலசந்திரன் – வட்டகச்சி), ஐவன் (மகாலிங்கம் – கனகபுரம்) ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 29 November 2022
Posted in செய்திகள்
சமஷ்டி என்ற பெயரில் நாடு பிரிக்கப்படுமாயில், பௌத்தத்தை பேணி பாதுகாக்க முடியாது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர யுத்தத்தில் உயிரிழந்தோரை வீடுகளுக்குள் நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்றார். நாடாளுமன்றத்தில் இன்று 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் சுகாதாரம் மற்றும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிங்களவர்களுக்குள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே. அதனை பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களிடமே உள்ளது. நாட்டை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே பௌத்த சாசனத்தை பாதுகாக்க முடியும். Read more
Posted by plotenewseditor on 29 November 2022
Posted in செய்திகள்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 11 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று (29) உத்தரவிட்டார். Read more
Posted by plotenewseditor on 29 November 2022
Posted in செய்திகள்
10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
Posted by plotenewseditor on 29 November 2022
Posted in செய்திகள்
சீனாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில், யாழ். பல்கலை மாணவர்கள் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் சீன விவசாயப் பல்கலைக்கழகத்துக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் 2022 நவம்பர் 25 ஆம் திகதி கையொப்பமிட இரகசிய ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை ஊடகங்களில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.