Header image alt text

சமூக மேம்பாட்டுப் பிரிவு News

31.12.1994இல் கொழும்பில் மரணித்த எமது கட்சியின் முன்னாள் உபதலைவர் தோழர் கரவை அங்கிள் (ஏ.சி. கந்தசாமி- கரவெட்டி) அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
தோழர் கரவை ஏ.சி.கந்தசாமி (கரவை அங்கிள்) அவர்கள்
ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் நீண்டகாலமாக தன்னை இணைத்து செயற்பட்டு வந்தார்.

Read more

புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன ஓய்வு பெற்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இன்று (31) இரவு முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். Read more

அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் இந்த புதிய சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன வெளியிட்டுள்ளார். Read more

காங்கேசன்துறை துறைமுகத்தை உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 23ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு, இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது. Read more

கன்சியூலர் அலுவலகத்தில் ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான கட்டணம் ஜனவரி முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி குறிப்பிட்டு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய, கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனவரி 1 ஆம் திகதி முதல் வாகனங்களை புதிதாக பதிவு செய்தல் மற்றும் வாகன உரிம மாற்றத்தின் போது வாகன இலக்கத் தகட்டில் உள்ள மாகாண குறியீடுகள் அகற்றப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிசாந்த வீரசிங்க கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். Read more

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். Read more

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 29 December 2022
Posted in செய்திகள் 

கிளிநொச்சி முரசுமோட்டை 8ம் கட்டையைப் சேர்ந்த திரு. காத்தமுத்து இலட்சுமணன் அவர்கள் நேற்று (28.12.2022) புதன்கிழமை காலமானதையிட்டு மிகுந்த துயரடைகின்றோம். இவர் தோழர் குணா (குணசீலன்) அவர்களின் அன்புத் தந்தையும், தோழர் தெய்வம் (தெய்வேந்திரம்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

Read more