2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 22 திகதி வரை இடம்பெறும்.

பின்னர், எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறும்.

தொடர்ந்து, ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.