Header image alt text

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை வௌ்ளிக்கிழமை (09) பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வி அமைச்சருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர், சரா.புவனேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

(08-12-2020 – 08.12.2022)
அமரர் திரு. இராமசாமி கிருஷ்ணபிள்ளை(தோழர் கிட்டு) அவர்கள்..
இவர் வவுனியா பாவற்குளம் 4ம் யூனிட்டை பிறப்பிடமாகவும் எல்லப்பர் மருதன்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவர். ஆரம்ப காலங்களில் கழகத்தின் பாவற்குளம் பிரதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்த இவர் கட்சி உறுப்பினராக கட்சிப் பணிகளில் மரணிக்கும் வரை மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 8 December 2022
Posted in செய்திகள் 

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல: 89, விசுவமடு மேற்கை தற்காலிக முகவரியாகவும் கொண்ட தனுக்கோடி தம்பிஐயா அவர்கள் (08.12.2022) இன்றைய தினம் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

Read more