மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஆச்சிபுரத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் ஆண்டவர் (அரசையா ஆறுமுகராசா) அவர்கள் நேற்று (10.12.2022) சுகயீனம் காரணமாக மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
11.12.2022.
குறிப்பு: அவரது உடல் வவுனியா முருகனூர் பாம் ரோட்டில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெறவுள்ளது.