முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பது, குறித்த பாடசாலைகளின் ஊடாக மாத்திரமே இடம்பெறுவதாகவும் கல்வி அமைச்சின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டின் மூன்றாம் தவணை ஆரம்பமாகும் 05.12.2022 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 24, 2023 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை முடிவடைந்த பின்னர் இருக்கும் காலியிடங்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து 2023 ஆம் ஆண்டின் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மாத்திரமே தற்போது கையாளப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.