புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலி மாரியம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு குழந்தைவேல் சோதிராசா அவர்கள் நேற்று (21.12.2022) புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். இவர் கட்சியினுடைய ஜெர்மன் கிளைத் தோழர் சி.தர்மினி அவர்களின் அன்புத் தந்தையும், அமரர் தோழர் கா.சிவகுமாரன் (சுப்பர் – ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
22.12.2022.
குறிப்பு: அவரது உடல் திருநெல்வேலி மாரியம்மன் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறவுள்ளது.