ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணியகத்தின் பணிப்பாளர்  இந்திரிக்க ரத்வத்தை தலைமையிலான பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று  (22) இந்த சந்திப்பு இடம்பெற்றது.  பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்திரிக்க ரத்வத்தை தலைமையிலான குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இவர்களுக்கிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறிப்பாக இலங்கை அகதிகள் குறித்தும், பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அகதிகள் குறித்தும் விசேட  கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாலார் அவர்களுக்கு ரத்வத்தை  நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் குழுவில்  மெனிக் அமரசிங்க (இலங்கைக்கான காரியாலய பிரதானி) மற்றும் சஞ்சிதா சத்தியமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். குறித்த இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளரின் இராணுவ உதவி அதிகாரி கேர்ணல் ரசிக குணசேனவும் கலந்துகொண்டார்.