கிளிநொச்சி முரசுமோட்டை 8ம் கட்டையைப் சேர்ந்த திரு. காத்தமுத்து இலட்சுமணன் அவர்கள் நேற்று (28.12.2022) புதன்கிழமை காலமானதையிட்டு மிகுந்த துயரடைகின்றோம். இவர் தோழர் குணா (குணசீலன்) அவர்களின் அன்புத் தந்தையும், தோழர் தெய்வம் (தெய்வேந்திரம்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
29.12.2022.