Header image alt text

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடுகளுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது. Read more

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இன நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படும் செயற்பாடுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். Read more

வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள். வவுனியா நகர சபை உறுப்பினரும் எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் திருநாவற்குளம் ஶ்ரீ நாகதம்பிரான் ஆலய 7ம் வீதி முதன் முறையாக 120ம் தூரம் கிரவலிடல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Read more

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டு மக்களை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். 13 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நிலைப்பாட்டை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். Read more

வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் வீதி அமைப்பு பணிகள். வவுனியா நகர சபை உறுப்பினரும் PLOTE அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் பாதீட்டு நிதியில் திருநாவற்குளம் வள்ளுவர் வீதி முதன் முறையாக 110m தூரம் கிரவலிடல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Read more

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த 23ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வரும் சூழலில், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பான விசாரணைகளின் தாமதமானது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும். அத்தோடு இது புலனாய்வுப் பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட பொலிஸாரின் பெருமையையும் கேள்விக்குள்ளாக்கும் என்று பெப்ரல் அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. Read more

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மரண அச்சுறுத்தல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். Read more

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தனை கரிநாளாக பிரகடனம் செய்துள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரையில் மூன்று நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்தப் பேரணிக்கு, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்தளத்தில் செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் தரப்பினரும் பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பெப்ரவரி முதல் வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோலை தளமாகக் கொண்ட குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிடியூட்டின் தற்போதைய தலைவராகவும் உள்ள பான் கீ மூன் பெப்ரவரி 06 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார். Read more