Header image alt text

04.01.1990 இல் மரணித்த தோழர் தேவன் (கிருஸ்ணப்பிள்ளை செல்வராஜா – புங்குடுதீவு) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

04.01.1985 ஆம் ஆண்டு மரணித்த தோழர் இ.ரவிசேகரன் (மாணவர் பேரவை) அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியால் நேற்று (03) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர்  இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர். நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை இதன்போது அவர்கள் பாராட்டியுள்ளனர். Read more

தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். Read more

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தங்களின் நிறுவன தலைவர்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.