Header image alt text

05.01.1996 ஆம் ஆண்டு வவுனியாவில் மரணித்த தோழர் அர்ச்சுணா (சிங்கராஜா நேசராஜா) அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புனரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று முதல் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்தார். Read more

05.01.1988 ஆம் ஆண்டு கல்நாட்டினகுளத்தில் மரணித்த கழகத்தின் முன்னாள் தென்மராட்சி பொறுப்பாளர் தோழர் ரகு (கண்ணாடி ரகு – கொக்குவில்) அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி கோணாவிலைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் சோ.பிரசாந்த் என்பவருக்கு கழகத்தின் ஜேர்மன் கிளை தனது புதுவருட செயற்பாடுகளில் ஒன்றாக சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கிய ரூபா 10,000/= பெறுமதியில் புத்தகப்பை, காலணி மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று (05.01.2023) வழங்கி வைக்கப்பட்டன.