கனடாவில் உயர்கல்வி பயிலும் யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த தயாபரன் சுவேதிகா என்ற மாணவியின் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் கட்டுடைக் கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கழகத்தின் ஊடகப் பொறுப்பாளர் இரா.தயாபரன் அவர்களின் தலைமையில் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக நடைபெற்ற கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் மேற்படி நிகழ்வில் கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிசோர், கட்சியின் வட்டார ஒருங்கிணைப்பாளர் உசாந்தன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.