Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) ஜேர்மன் கிளையின் நிதி பங்களிப்பில் கழகத்தின் சமூக மேம்பாட்டு பிரிவினால் மட்டக்களப்பு முனைக்காட்டைச் சேர்ந்த சி.பிறேமதாஸ்(பிறேமன்) என்பவருக்கு ஐம்பதாயிரம் (50000/-) பெறுமதியான மீன் பிடி உபகரணங்கள் இன்று 08-01-2023 ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா, சமுகமேம்பாட்டுப்பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவன், மத்தியகுழு உறுப்பினர் க.கிருபைராஜா, ஆகியோர் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது. Read more

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் இடம்பெற்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 124ஆவது ஜனன தின நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று  பேச்சுவார்த்தைக்காக தாய்லாந்து பிரதானிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று(08) நாட்டிற்கு வருகை தந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது Read more

இந்தியாவில் நடைபெறவுள்ள “வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் உள்ளிட்ட 20 அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. Read more