Header image alt text

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி  உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more

இன்று முற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையேயான சந்திப்பின்போது மட்டக்களப்பில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஏனைய இரு கட்சிகளான புளொட் ரெலோ கேட்டபோது, தாம் தனித்தே போட்டியிடுவதாக முடிவினை அறிவித்தது.

Read more

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தரங்க மஹரத்னே முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. கனகரத்தினம் ஆதித்யன் என்ற தமிழ் அரசியல் கைதியே 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். Read more

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் கொல்லப்பட்ட 49வது சிரார்த்ததினம் இன்றாகும்.

Read more