தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 9ம் திகதி முதல் புதுக்குடியிருப்பில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த சமூக செயற்பாட்டாளர் வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் இன்று தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

அவர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பொருத்தமான வகையிலேயே நாங்கள் இப்போதும் செயற்பட்டு வருகிறோம், தொடர்ந்தும் செயற்படுவோமென தமிழ் கட்சிகளின் தலைவர்கள் போராட்ட களத்திற்கு சென்று வழங்கிய உத்தரவாதத்ததை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட து.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் சார்பில் அதன் பொருளாளர் க.சிவநேசன்(பவன்), ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் போராட்ட களத்திற்கு நேரில் சென்றிருந்தார்கள்.