உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் (CPA) ஸ்டீபன் டுவிக்  (StephenTwigg) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தார். இச்சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.