சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு கோரலுக்கான திகதியை அறிவிப்பதற்கு முன்பிருந்தே சில தரப்பினர் தேர்தல் நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். Read more