மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை 2023 பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஊவா, மத்திய மற்றும் தென்மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன்  தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கப்ரால் பதவி வகித்த காலத்தில் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.