Header image alt text

நாடாளுமன்றில் இன்று (18) நிறைவேற்றப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டம் தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கொள்கை கூட்டமைப்பு என்பன தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வு பணியக சட்டத்தினூடாக குறித்த மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை இராணுவத்திற்கு வழங்க முயற்சிப்பதானது கவலையளிப்பதாக அந்த அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ​மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இன்று(18) மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொள்கின்ற நிலையில், அந்த பயணத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். Read more

21 ஆவது அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பிரதாப் ராமனுஜம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் கலாநிதி வெலிகம விதான ஆரச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோரே அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களாவர். Read more

உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு அமைய, உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்திற்கு இன்று(18) மீண்டும் உறுதியளித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர் நீதிமன்றத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more

பாராளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலம் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்பட்டபோது  போராட்ட செயற்பாட்டாளர்களும் புனர்வாழ்வு என்ற போர்வையில் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட முடியும் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. Read more

யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.