வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி (2023) நேற்று (18.01.2023) புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் முதல்வர் திருமதி அ.வசந்தராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக எமது கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு. ஜி.ரி லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக திரு. சி.சூரியகுமார்(வைத்தியர்-சேமமடு அரசினர் வைத்தியசாலை), திருமதி கு.அருள்ராணி(பாடசாலை வசதிப்படுத்துனர்) ஆகியோரும்,
கௌரவ விருந்தினர்களாக மனிதநேய மக்கள் ஒன்றியம் அயற்பாடசாலை அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர் எஸ்.நிரோசன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் க.அனுசாந், அமுதசுரபி (முருகனூர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு, முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், நலன் விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஊர்ப் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.