ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேபோல் உண்மையைக் கண்டறியவும் நீதியை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்குமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களின் துன்பம் மற்றும் வலியை துடைக்க முடியாது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக இந்த தீர்ப்பு ஒரு படியாகும். உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றுக்கான அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடுகிறோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்மி லோரன்ஸ் கூறியுள்ளார்.

நீதிமன்றம் தமது தீர்ப்பில், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் ‘கண்காணிப்பு மற்றும் செயலற்ற தன்மை’ குறித்து அதிர்ச்சியையும் திகைப்பையும் வெளிப்படுத்தியது.
விரிவான புலனாய்வு பரிந்துரைகள் இருந்தபோதிலும், முன்னாள் ஜனாதிபதியும் அவரது உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிவிட்டனர் என்று தீர்ப்பளித்தது. அத்தகைய தாக்குதல்கள் உன்மையானவை என்று ஜெர்மி லோரன்ஸ் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்யுமாறும், அவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் நிதியை வழங்குவதில் முழுமையாக கலந்தாலோசிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் பற்றிய முந்தைய விசாரணைகளின் முழுமையான கண்டுபிடிப்புகளை வெளியிடவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச உதவி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுப் பங்கேற்புடன், அரசாங்கம் ஒரு தொடர்ச்சியான சுயாதீன விசாரணையை நிறுவ வேண்டும். மேலும் பொறுப்பான அனைவரையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.