போலியான முறையில் தனது கையெழுத்தை இட்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை பதிவு செய்தார்.

சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் சார்பில் தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் போட்டியிடுவதற்கு, சுதந்திரக் கட்சி வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதன் பின்புலத்திலேயே இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.