அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலர் விக்டோறியா நூலண்ட் இன்று (01/02/2023) கொழும்பில் தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன்,  ரவூப் ஹக்கீம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  ரிசாத் பதியுதீன் ஆகியோரும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

வெவ்வேறு அரசியற் பார்வைகளைக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து தீர்வுகளை நோக்கிச் செயல்படும்போது, ​​ஜனநாயகம் வலுப்பெறும் என்ற நம்பிக்கையோடு – நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுக்கான எதிர்பார்ப்புகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.