பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த  இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில், இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரே நேற்று (01) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் வவுனியா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரே வவுனியா மேல் நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மற்றுமொருவரும் நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.